அலங்கரிப்பார்

என் மனமே உன்னை மறப்பாரோ?
தேவன் உன்னை மறந்து போவாரோ ?
துயரங்கள் எல்லாமே மறைய செய்வாரே
ஆனந்த தைலத்தை உன் மேல் பொழிவாரே

துதிக்க வைப்பாரே
உன்னை அலங்கரிப்பாரே
இடிந்து போனதெல்லாம்
உயிர்த்தெழும்ப செய்வாரே

1. வாதிப்பின் சத்தம் கேட்ட
உன் எல்லை எல்லாமே
வர்த்திப்பின் பாடல் சத்தம்
இன்று முதல் கேட்குமே

குறுகிப்போவதில்லை
நீ சிறுமை அடைவதில்லை --- துதிக்க

சீர்ப்படுத்தினாரே ஸ்திரப்படுத்தினாரே
பலப்படுத்தினாரே நிலை நிறுத்தினாரே
சீர்ப்படுத்தி உன்னை உயர்த்தி வைத்த தேவன்
இந்தப் புதிய ஆண்டில் அலங்கரிப்பாரே

2. விசாரிக்க யாருமின்றி
தள்ளுண்ட உன்னையே
ஆரோக்கியம் வரப்பண்ணி
ஆளுகை தருவாரே

இடிந்த அலங்கத்தை (அலங்கம் உன்னை)
அவர் அரண்மனை ஆக்கிடுவார் --- துதிக்க